நாட்டில் இருமடங்காகும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை.

நாட்டில் மீண்டும் நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நேற்றைய தினம் மாத்திரம் 2,423 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறியுள்ளார்

இவ்வகையில் நாட்டில் உறுதியான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 316,192 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 282,770 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.