யாழில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொவிட்19 மரணங்கள்!

0
325

யாழில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 4 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

இதற்கமைய யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும் மானிப்பாய், நவாலி மேற்கைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவருமாக மூவர் உயிரிழந்தனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் வெளிநோயாளர் பிரிவில் உயிரிழந்த நிலையில் பிசிஆர் பரிசோதனையில்கொவிட் -19 நோய்த் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படு மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 145ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.