நம் தலைவிதியை மாற்றும் பிராம்மி தேவி தாந்த்ரீக பரிகாரம்

0
378

மனிதனாக பிறந்த அனைவரது வாழ்விலும் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான பிரச்சனை இருக்கும். குறிப்பாக ஒரு சிலர் தாங்கள் பிறந்த நாள் முதல் தற்போதைய தினம் வரை, வாழ்கியல் சந்தோசம் என்பதையே இழந்து, அதே சமயம் பல்வேறு வகையான கஷ்டங்களை அனுபவித்து வருபவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் தங்களுடைய துன்பங்கள் நீங்க பல்வேறு ஆலயங்களுக்கு சென்று வழிபடுவார்கள். இருப்பினும் சில தாந்த்ரீக பரிகாரங்களையும் அதனுடன் சேர்த்து செய்யும்போது கூடிய விரைவில் நல்ல பலன்களை கொடுக்கும்.

தாந்திரீக வழிபாட்டில் சப்தகன்னியர்கள் வழிபாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. வாழ்வில் அனைத்து சுகங்களையும் அருளுகின்ற தெய்வமான பிராம்மி தேவிக்கு பூஜை செய்து தங்களுக்கு தேவையான பலன்களை தாந்த்ரீக முறைகளை பயில்பவர்கள் பெறுகின்றனர். அப்படியே பிராம்மி தேவியை வழிபட்டு பலன் அடைந்த தாந்திரீகர்கள் கூறிய ஒரு பரிகாரத்தை பின்பற்றுவதால், நாமும் நம் தலைவிதியும் மாறுவதோடு வாழ்வில் அனைத்து நன்மைகளும் கிடைக்கப் பெறலாம்.

உங்கள் வீட்டின் பூஜை அறையில் அம்பாள் படத்திற்கு முன்பாக ஒரு சிறிய அளவு தாம்பாளத் தட்டில் மஞ்சள் தூள் கலந்த நீரை ஊற்றி, இரண்டு தீபங்களை ஏற்றி கிழக்குத் திசையை நோக்கி பார்த்தவாறு அந்த தட்டில் வைத்து, சிறிது கற்கண்டுகளை நைவேத்தியமாக வைத்து ஓம் ப்ராம்மியே நமஹ என்கிற மந்திரத்தை 108 முறை ஜபித்து வர வேண்டும்.

இந்த பரிகார வழிப்பாட்டை தினந்தோறும் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளாக செய்வதால் மட்டுமே எதிர்பார்த்த பலன்களை பெற முடியும்.

இந்த தாந்த்ரீக பரிகாரங்கள் தினமும் செய்துவர தங்கள் வாழ்வில் சிறிது, சிறிதாக நல்ல படியான மாற்றங்கள் ஏற்படுவதை நீங்களே உணர முடியும்.