எக்ஸ்பிரஸ் பேர்ள்´ கப்பலின் எண்ணெய்க் கசிவு தொடர்பில் வெளியான தகவல்.

0
320

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் ஏற்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள்´ கப்பல் விபத்தினால் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கப்பலினால் ஏற்பட்ட தாக்கங்கள் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பான இழப்பீடுகளைப் பெற்றுக் கொள்ள, அது பற்றி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றங்களைக் கண்டறிதல் போன்ற விடயங்கள் பற்றி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் நேற்று (02)கலந்துஆலோசிக்கப்பட்டது.

மேலும், சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகார சபை, ´நாரா´ நிறுவனம், கடற்படை உட்பட துறைசார் தரப்புகளின் ஆலோசனைகளும் இதன் போது வழங்கப்பட்டன. சேதமடைந்துள்ள கடல் பகுதியைச் சுத்தப்படுத்துவதற்கு கடற்றொழிலாளர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.