அதிகரித்துள்ள கோவிட் மரணங்கள்! – அனைத்து சுடுகாடுகளும் 24 மணி நேரமும் செயல்பட முடிவு.

0
348

கோவிட் வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. இதனால், மருத்துவமனை பிணவறைகளில் ஏற்படும் இடப்பற்றாக்குறையை குறைப்பதற்காக களுத்துறை மாவட்டத்தில் அனைத்து சுடுகாடுகளும் 24 மணி நேரமும் செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

களுத்துறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் உதய ரத்நாயக்க இதை தெரிவித்துள்ளார்.

களுத்துறை தலைமை அரசாங்க அதிபர் பிரசன்ன கினிகேயுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்த முடிவு குறித்து எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா கமேலும் தெரிவித்தார்.