30 வது நாளாகவும் தொடரும் போராட்டம்!

0
324

இணைய வழி கற்பித்தல் செயற்பாட்டினை புறக்கணித்து அதிபர் , ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 30 வது நாளாகவும் தொடர்கிறது.

இதற்கமைய வேதனை பிரச்சினைகளை முன்வைத்தே அதிபர் , ஆசிரியர் தொழிற்சங்கத்தினரால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் நேற்றையதினம் அதிபர் , ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் சிலவற்றுடன் கலந்துரையாடைலை மேற்கொண்டிருந்தனர்.

மேலும் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பில் ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்தது நாளை சத்தியா கிரக போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது,