ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவ சங்க தலைவர்கள் உட்பட பலர் கைது!

0
315

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவ சங்க தலைவர்கள் உட்பட பலர் காவல்துறையினரால் கடந்த 3 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதற்கமைய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சங்கங்களின் ஏற்பாட்டாளர் மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தின் தலைவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து வந்த மூன்று வாகன சாரதிகளும் தலங்கம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.