மன்னாரில் உயரும் கொரோனா உயிரிழப்பு.

0
320

மன்னாரில் களுத்துறை பகுதியை சேர்ந்த (66 வயது) பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மன்னார் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வைத்தியர் ரி.வினோதன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.