கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக திருத்த சட்ட மூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படாதா? – வெளியான தகவல்.

0
332

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக திருத்த சட்ட மூலம் தொடர்பாக ஆர்ப்பாட்ங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று (06) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என்று அரசாங்கம் ​நேற்று (04) அறிவித்துள்ளது.

பொது மக்கள் இதுதொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு மேலதிக கால அவகாசத்தை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிமசிங்க நேற்று சபையில் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.