நாடாளாவிய ரீதியில் தாதியர் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானம்.

0
318

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலுமுள்ள ஊழியர்கள் மற்றும் அனைவரும் இன்று காலை 06 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை பணிபகிஷ்கரிப்பை நடத்தவுள்ளதாக அரச தாதியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அரச ஊழியர்கள் அனைவரையும் திங்கட்கிழமை முதல் வழமைபோல சேவைக்கு அரசாங்கம் அழைத்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்தப் பணிபகிஷ்கரிப்பை நடத்தவுள்ளதாக தாதியர்கள் சங்கத்தின் தலைவரான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

மேலும், குறித்த பணிபகிஷ்கரிப்பிற்கு 44 தொழிற்சங்கங்கள் இணையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.