அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல்!

0
299

அரச சேவைகளுக்காக ஊழியர்களை அழைப்பு விடுவிக்கும் நடைமுறை மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அலுவலகங்களுக்கு சேவைக்காக அத்தியாவசியமானவர்களை மாத்திரமே அழைக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அலுவலகங்களில் அதிக பட்சமாக இருக்கக்கூடிய ஊழியர்களின் எண்ணிக்கையை பிரதானியே தீர்மானிக்க வேண்டும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரையில் அனைத்து அரச நிகழ்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.