திருமண நிகழ்வுகளை நடத்துவது தொடர்பில் வெளியான தகவல்!

0
300

திருமண மண்டபங்களில் 500 இருக்கைகள் காணப்படுமாயின் அதில் 150 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 500 இருக்கைகளுக்கு குறைந்த திருமண மண்டபங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் 100 பேருக்கு மாத்திரமே அனுமதி உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உடன் அமுலுக்கு வரும் வகையிலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மரணச் சடங்குகளில் 25 பேர் மாத்திரமே கலந்துகொள்ள அனுமதி உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.