மதுசூதனன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முலமைச்சர் மு.க ஸ்டாலின்!

0
299

அதிமுகவின் அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய இவர் அண்மையில் உடல் நலம் குன்றி ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் காலமானார்.

இவ்வாறு உயிரிழந்த மதுசூதனன் உடல் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு இன்று கொண்டு வரப்பட்டு, அ.தி.மு.க.வினர், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது உடலுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் இன்று அஞ்சலி செலுத்தினர்.

அவ்வாறு தண்டையார்பேட்டை உள்ளத்தில் மதுசூதனன் உடலுக்கு முலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவிற்கு அதிமுக தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் முன்னாள் அமைச்சர் மதுசூதனன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.